இந்த அறிகுறிகள் இருந்தால் நிச்சயமாக பிறக்க போவது இரட்டைக் குழந்தை தானாம்..!


கருவுற்றுள்ள தாயின் வயிறு வழமைக்கு மாறாக பெரிதாக உள்ளதா? அப்படியெனில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்கின்றமைக்கான அறிகுறியே அது என்றார்கள் நம் முன்னோர்கள். ஒரு பெண் பொதுவாக 30 வயதைத் தாண்டி விட்டால், உடலில் அதிகபடியான ஹோர்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் ஒரு முட்டைக்கு பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் கருப்பைக்கு வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். அதனால் இரட்டை குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

அது சரி, உண்மையாகவே இரட்டை குழந்தைகளை சுமக்கும் தாய் ஒருவருக்கு என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என நாம் பார்ப்போம்.

01. தாய்க்கு அதிகபடியான குமட்டல் ஏற்படும். இந்தக் குமட்டல் வழமைக்கு மாறானதாக காணப்படும். இந்த நிலைமை தாய் கருவுறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பித்து விடும்.

02. கருவுற்று இரண்டு அல்லது மூன்று வாரங்களிலேயே அதிகபடியான சோர்வு மற்றும் தூக்கம் என்பன ஏற்படும்.

03. சாதாரண தாய்மார்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இரட்டை குழந்தையை சுமக்கும் தாய்மார்களுக்கு அதிக பசி ஏற்படும்.


04. ஒரு பெண்ணின் சிறுநீர் மற்றும் இரத்தத்தில் உள்ள எச்.சீ.ஜியின் அளவு அதிகரித்துக் காணப்படுமாயின் இவர் கருவுற்றுள்ளார் என்கிறது வைத்தியம். ஆனால் அந்த அதிகரிப்பு வழமையை விட அதிகமாகக் காணப்பட்டால் அது இரட்டைக் குழந்தைக்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05. உடலின் எடை மிக விரைவாகவும் ஏற்படுவதுடன் அதிகமாகவும் காணப்படும்.

06. மிக விரைவாக குழந்தையின் அசைவுகளை தாயால் உணர முடியும். அத்துடன் குழந்தையின் அசைவும் அதிகமாக காணப்படும்.

07. இதயத் துடிப்பு பரிசோதனையின் போது இரு வேறு இதயத் துடிப்புக்களை அவதானிக்க முடியும்.


08. கருவுற்று சில நாட்களிலேயே கால்களில் அடிக்கடி சுளுக்கு ஏற்படும்.

09. அதிகபடியான முதுகு வலி ஏற்படுதல்.

10. ஒரு குழந்தையை சுமக்கும் தாய்க்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்படும். அதே போல் இரட்டைக் குழந்தையை சுமக்கும் தாய்க்கு மிக அதிகமான சிறுநீர் வெளியேற்றம் ஏற்படும். எனினும், தண்ணீர் மற்றும் குடிபான வகைகளை உட்கொள்வதை தவிர்க்கக் கூடாது. ஏனெனில் கர்ப்ப காலத்தில் உடலை வறட்சியடையாது கவனித்துக்கொள்ள வேண்டும்.
– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!