பிக்பாஸ் ஆயிஷாவுக்கு கல்யாணம் ஆகிருச்சு… முன்னாள் காதலர் பகீர் பேட்டி.!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ஆயிஷா குறித்து அவரது முன்னாள் காதலர் தேவ் அளித்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீசன் இரண்டு வாரம் முடிவடைந்த நிலையில் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். இதனையடுத்து முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் அசல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரபலமான போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆயிஷா.

கடந்த வாரம் இவர் கமலை எதிர்த்து மரியாதை இல்லாமல் பேசியது இணையத்தில் கடும் விவாதங்களை கிளப்பியது. இந்நிலையில் ஆயிஷாவின் முன்னாள் காதலர் என கூறப்படும் தேவ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். ஏற்கனவே அவருக்கு இரண்டு முறை திருமணமாகிவிட்டது என்ற பகீர் தகவலை கூறியுள்ளார்.

மேலும், “ சென்னை அமிர்தாவில் படித்துக் கொண்டிருந்த போது ஆயிஷா என் நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். அவருக்கு நான் தான் சீரியலில் வாய்ப்பு வாங்கி கொடுத்தேன். இருவரும் காதலித்தோம். ஒரே வீட்டில் தங்கி இருந்தோம். அவருக்கு ஏற்கெனவே திருமணமும் ஆகி விட்டது. அதை எல்லாம் தெரிந்து தான் நான் அவரை காதலித்தேன். ஆயிஷா வீட்டுக்கு சென்றும் அவரை கல்யாணம், செய்து கொள்ள கேட்டு இருந்தேன். அவர்கள் சம்மதிக்கவில்லை.

வாய்ப்புக்காக டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டார். அந்த அக்கவுண்டையும் நான் தான் பார்த்துக் கொள்வேன். ஆனால் டிக் டாக் செய்யும் போது நான் சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தேன் என்று என்னை தப்பானவன் போல் குறிப்பிட்டு பிக் பாஸில் ஆயிஷா பேசி இருக்கிறார்.

சத்யா சீரியல் சென்ற பின்பு விஷ்ணுவுடன் நெருக்கம் ஆனார். அதன் பின்பு என்னை பிரேக் அப் செய்துவிட்டார்.என்னை 3 வருடமக டிரைவர் போல் யூஸ் செய்துவிட்டு கடைசியில் எந்த காரணமும் சொல்லாமல் விலகி விட்டார்.

இப்போது என் தங்கையின் முன்னாள் காதலன் யோகேஷ் என்பவருடன் நெருக்கமாக இருக்கிறார். அதனால் தான் y என செயினில் டாலர் போட்டிருக்கிறார். அவர் எப்போதுமே நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வார்.

யாரை எல்லாம் காதலிக்கிறாரோ அவருடன் வெளியில் செல்லும் போதெல்லாம் இப்படி தான் செய்வார்” என ஆயிஷா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார் தேவ். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.–News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!