நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்!

ஒருவரின் குணநலன் அவர் பிறந்த மாதம் மற்றும் தேதிகளை பொறுத்து மாறுபடும். அந்தவகையில், நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

பூமியில் ஒரு உயிரினம் பிறப்பதற்கு முன்பே அதன் விதி நிர்ணயிக்கப்பட்டுகிறது. அதனுடன், அவர்களின் நற்செயல்களும், தீயசெயல்களும், குணநலன்களும் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் குணாதிசயமும் அவர்கள் பிறந்த மாதத்தை பொறுத்து மாறுபடும்.

அந்த வகையில், நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை ஒவ்வொன்றாக இங்கு குறிப்பிட்டுளோம். நீங்களும் நவம்பர் மாதத்தில் பிறந்தவராக இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது.

​படைப்பாற்றல் மிக்கவர்கள் – CREATIVE

கிரியேட்டிவாக இருப்பது எளிமையான விஷயம் இல்லை. அந்தவகையில், நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். புதுமை என்பது அவர்களின் அடிப்படை பிறவி குணங்களில் ஒன்று.

அவர்களை போல மற்றொருவரை நீங்கள் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்களின் வாழ்க்கையை பற்றிய அணுகுமுறை எப்பொழுதும் வித்தியாசமானதாக இருக்கும், அனைத்து விஷயங்களையும் அவர்கள் பார்க்கும் கோணமே வேறுமாதிரி இருக்கும்.

இது தான் அவர்களை தனித்துவமானவர்களாகவும், சிறப்பானவர்களாகவும் மாற்றும். இவர்கள் இயல்பாக கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர்கள். அவர்களின் சிந்தனைகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாகவும் கிரியேட்டிவாகவும் காணப்படும்.

​இவர்களை புரிந்துகொள்வது கடினம் – SECRETIVE

அவர்களின் தனிமை, பெரும்பாலும் மற்றவர்கள் அவர்களை தவறாக புரிந்துகொள்ள வழிவகுக்கும். ஆனால், அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். மேலும், அவர்கள் மனதளவில் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை காயப்படுத்த விரும்பமாட்டார்கள். அவர்கள் செய்யாத தவறுகளுக்கு பலநேரம் பழிசுமப்பார்கள்.

எவ்வளவு நெருக்கமாக பழகினாலும் அவர்களை புரிந்துகொள்ள நீங்கள் நிறைய காலம் செலவிட நேரிடும். அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். இந்த குணம் இவர்களை இன்னும் சிறப்பாக்குகிறது.

​நம்ப வைக்கும் சக்தி – CONVINCING POWER

தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை நம்பவைப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. ஆனால், அந்த திறமை நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு உள்ளது. இவர்கள் ஒரு விஷயத்தை செய்ய எளிமையாக ஒருவரை கன்வென்ஸ் செய்ய முடியும். அது நல்ல விஷயமாகவும் இருக்கலாம் அல்லது கெட்ட விஷயமாகவும் இருக்கலாம். அதுமட்டும் அல்ல, இவர்கள் நேர்மை மற்றும் விசுவாத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.

அவர்கள் ஒருவர் மீது விசுவாசம் வைத்துவிட்டால் அவர்கள் சாகும்வரை அதை மாற்ற மாட்டார்கள். அதேபோல, நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் தனது நண்பர்களை ஒருபோதும் ஏமாற்றவோ அல்லது விட்டுக்கொடுக்கவோ மாட்டார்கள். தங்கள் நண்பர்களை பாதுகாக்க அவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள். இது இவர்களிடம் இருக்கும் மிகச்சிறந்த குணங்களில் ஒன்று.

​தன்னம்பிக்கை உள்ளவர்கள் – SELF-CONFIDENT

நவம்பரில் பிறந்தவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியவர்கள். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தன்னம்பிக்கை அவசியமான ஒன்று. அந்தவகையில், நவம்பரில் பிறந்தவர்கள் சிறப்பு மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள்.

அவர்கள் மற்றவர்களுடன் நன்கு பழகுவார்கள். ஆனால், அவர்கள் விதித்துள்ள எல்லையை பொறுத்தே மற்றவர்களிடம் பழகுவார்கள். அவர்களின் தனிமையில் கூட நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பவர்கள்.

​நேர்மையானவர் – STRAIGHT FORWARD

மனதில் பட்டத்தை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பேசக்கூடியவர்கள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இவர்கள் இது சரி இது தவறு என்பதை மற்றவர்களுக்கு தயக்கம் இன்றி தெரியப்படுத்துவார்கள். அதேசமயம், மற்றவர்களுக்காகவும் கடைசி வரை நிற்கும் குணம் கொண்டவர்கள்.

அதுமட்டும் அல்ல, தங்களுக்கோ அல்லது தங்களை சுற்றி இருப்பவர்களுக்கோ எந்த அநீதி நடந்தாலும் அவர்கள் அதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை சுற்றி எந்த தப்பு நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அவர்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை எதிர்க்க அவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

​உணர்ச்சிகரமானவர்கள் – EMOTIONAL

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் மிகப்பெரிய பலவீனம் இது. ஒரு செயல் நடக்கவில்லை என்றாலோ அல்லது ஒரு சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாவிட்டாலோ அவர்கள் தங்கள் சுய தன்மையை இழந்துவிடுவார்கள்.

அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு நிலைதடுமாறும்போது அந்த சூழ்நிலையை மற்றவர்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்கள் இதயம் ரொம்ப மென்மையானதால் மற்றவர்கள் அதனை பலவீனமாக பயன்படுத்துவார்கள்.

​பொறாமை குணம் உடையவர்கள் – JEALOUS

அவர்கள் சில நேரங்களில் பொறாமை எண்ணமும், விரோத எண்ணமும் கொண்டவர்கள். ஆனால், அது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்காது. அவர்களுக்கு தங்கள் பலம் மற்றும் பலவீனம் குறித்து நன்கு தெரியும். எனவே, அவர்கள் தங்களை விட சிறந்தவர்களை பார்க்கும்போது அவர்கள் மேல் பொறாமை கொள்வார்கள்.

அவர்களின் சிறந்த நண்பன் வேறு சிலருடன் சிரித்துப் பேசிப் பழகும்போது பொறாமைப்படுகிறார். ஆனால், அவர்களிடம் இருக்கும் சின்ன பொறாமை அவர்களை பெரிய அளவில் காயப்படுத்தாது, ஏனென்றால் அதை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!