புதுச்சேரி சீகம் உரிமையாளர் தாமோரன் மகனும், பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என் வாழ்வின் முக்கிய அங்கமான கிரிக்கெட்டுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க கடமைப்பட்டுள்ளேன். ஆனால் சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.
இதில் இருந்து மீண்டு வர நினைப்பதால் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற நினைக்கிறேன். அவதூறு தருணங்களில் எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு, எனது நன்றிகள். மீண்டும் சரியான நேரத்தில் நான் வருவேன்’ என்று பதிவிட்டுள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!