வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிகேட்ட மனைவி – சினிமா தயாரிப்பாளர் செய்த அதிர்ச்சி செயல்!

‘சர்மா ஜி கி லக் கயி’, ‘தேஹாட்டி டிஸ்கோ’, ‘காலி பாலி’ உள்பட பல பாலிவுட் படங்களை தயாரித்தவர் கமல் கிஷோர் மிஸ்ரா. மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

மிஸ்ரா தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார். அந்நேரம் அவரின் மனைவி யாஷ்மின் மிஸ்ராவை தேடி கார் பார்க்கிங் பகுதிக்கு வந்தார். அப்போது காரில் வேறு ஒரு பெண் இருப்பதை பார்த்து தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்லும் மனநிலையில் இருந்த மிஸ்ரா காருடன் வேகமாக புறப்பட முயன்றார். இதில் மிஸ்ரா மனைவி காரில் அடிபட்டு கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் மிஸ்ரா மனைவிக்கு கால், கை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்தில் இருந்து மிஸ்ரா காரில் தப்பிச்சென்றுவிட்டார்.

காயம் அடைந்த மிஸ்ரா மனைவி இது குறித்து அம்போலி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மிஸ்ரா மனைவி கார் இடித்து கீழே விழுவது தெளிவாக பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் கமல் கிஷோர் மிஸ்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதால் மிஸ்ரா தலைமறைவாகிவிட்டார். மிஸ்ரா தேஹாட்டி டிஸ்கோ என்ற இந்தி படத்தை தயாரித்துள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!