ஜிபி முத்துவுக்கு பிக்பாஸ் கொடுக்க போகும் சர்ப்ரைஸ்.!

தீபாவளியை முன்னிட்டு ஜிபி முத்துவுக்கு பிக்பாஸ் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மைனா நந்தினி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

கமலால் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்து சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடிப் பக்கம் கரை ஒதுங்கினார். சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள ஜிபி முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே டல்லாக இருந்த ஜிபி முத்து, தன்னால் முடியவில்லை என்றும் வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது பரபரப்பை கிளப்பியது. பிக்பாஸ் வீட்டில் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளரான ஜிபி முத்துவின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அவருக்கு பிக்பாஸ் அறிவுரை வழங்கி வீட்டிலே இருக்க சொன்னார். இந்நிலையில் இந்த தீபாவளியையொட்டி பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினர் ஜிபி முத்துவிற்கு சர்ப்பிரைஸ் தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற போட்டியாளராக ஜிபி முத்து திகழ்கிறார். அவருக்காகவே நிறைய ரசிகர்கள் இந்த பிக்பாஸ் சீசனை பார்த்து வருகின்றனர். இதனால் அவர் நிகழ்ச்சியின் இடையில் வெளியேறுவதை விஜய் டிவி விரும்பவில்லை. இதன் காரணமாகவே ஜிபி முத்து, அவரது குடும்பத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!