ஜனனி வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா..? ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!

பிக் பாஸ் 6 வீட்டில் சிரித்த முகமாக இருக்கும் ஜனனி வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டம் இருப்பது தெரியாமல் போய்விட்டதே என்கிறார்கள் பார்வையாளர்கள்.


பிக் பாஸ் 6 வீட்டில் கதை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கதை சொல்லி முடித்தால் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்றார் பிக் பாஸ்.

இதையடுத்து தன் கதையை சொல்லியபோதே உங்களின் வாய்ப்பு முடிந்துவிட்டது என்று அசீமிடம் கூறினார் பிக் பாஸ். அவர் கண்ணீர்விட்டார்.

இந்நிலையில் இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் ஜனனி தான் கதை சொல்கிறார். ஜனனி கூறியதாவது,

என்னை பார்க்கிற ஆட்கள் எல்லாம், இந்த புள்ள சிரிச்சுக்கிட்டே இருக்கும். எந்த பிரச்சனையும் இருக்காது. இவளுக்கென்ன பிரச்சனை இருக்கும் என்பார்கள். ஆனால் அப்படி எல்லாம் இல்லை.

நான் படித்துக் கொண்டிருந்தபோதே வீட்டை பார்த்துக்கொள்ளும் நிலைமை வந்துவிட்டது. வேலைக்கு போனேன். ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடம் போக முடியவில்லை என்றார்.

அவர் கதையை முடிக்கும் முன்பே வாய்ப்பு முடிந்துவிட்டதாக தெரிவித்தார் பிக் பாஸ். இதையடுத்து ஜனனியும் ஃபீல் செய்து அழுதுவிட்டார்.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

அடுத்த வாரம் வெளியே போகப் போவது தெரியாமல் தனலட்சுமி ஓடி வருவதை பாரு. போர் நடந்த நேரத்தில் பிறந்திருக்கிறார் ஜனனி. அதனால் அவரின் வலியை புரிந்துகொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!