கல்லூரி மாணவிகளுடன் ஓவர் நெருக்கம் காட்டிய முகமது ஷபி!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி (வயது 50), தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) ஆகியோர் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணாமல் போனார்கள். காணாமல் போன பத்மாவை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை முகமது ஷபி என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

போலீசார் முகமது ஷபியை கைது செய்து விசாரித்தபோது, அவர் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டுக்கு அழைத்து சென்று பத்மாவை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதுபோல எர்ணாகுளத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் மாயமான ரோஸ்லியும் இதுபோல நரபலி கொடுக்கப்பட்டதையும் முகமது ஷபி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் முகமது ஷபியின் நண்பர்களான பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் நரபலி நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். இதில் பகவல் சிங் வாழ்க்கையில் செல்வம் பெருக பூஜை நடத்தியதும், இதற்காக ரோஸ்லி மற்றும் பத்மாவை கடத்தி வந்து நரபலி கொடுத்ததாகவும் கூறினர்.

நரபலி கொடுக்கும் முன்பு அவர்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும், நரபலி கொடுத்த பின்பு அவர்களின் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறி அதிரவைத்தனர். ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்க கடத்தி வந்தது முகமது ஷபி என்பதால் அவரை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்த போலீசார் அவரது பின்னணி பற்றி விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.

இதில் முகமது ஷபியின் குரூர மனம், அவர் பெண்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்தார் என்பது பற்றிய பகீர் தகவல்கள் தெரியவந்தது. மேலும் முகமது ஷபி மீது 8-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகளும், 70 வயதான மூதாட்டியையும் கற்பழித்து அவரது மர்ம உறுப்புகளை சிதைத்த குற்றச்சாட்டும் அவர் மீது இருப்பது தெரியவந்தது.

அப்படிதான் இவர் பகவல் சிங்கையும் தன் வசப்படுத்தி உள்ளார். பகவல் சிங்குக்கும் இவருக்கு பேஸ்புக் மூலமே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் தொடங்கிய பேஸ்புக் பக்கத்தில் பல ஹைக்கூ கவிதைகளை பதிவிட்டுள்ளார்.

அதில் மாந்திரீகம் மூலம் செல்வம் பெருக வழிகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனை பார்த்துதான் பகவல் சிங், முகமது ஷபியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்பின்பு இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். அதன்பின்புதான் பெண்களை வைத்து நிர்வாண பூஜை, நரபலி அளவுக்கு சென்றுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக பகவல் சிங்கின் கண்முன்பே அவரது மனைவியுடன் முகமது ஷபி உல்லாசமாக இருந்துள்ளார். இதுவும் செல்வம் தரும் பூஜையின் ஒரு பகுதி என பகவல் சிங்கிடம் கூறியுள்ளார். முகமது ஷபி எர்ணாகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இதன் அருகே கல்லூரி மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கி இருக்கும் சில மாணவிகள் அடிக்கடி முகமது ஷபியின் ஓட்டலுக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களில் 2 பேரிடம் முகமது ஷபிக்கு அதிக நெருக்கம் இருந்ததை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

அந்த மாணவிகளை முகமது ஷபி அடிக்கடி நரபலி நடந்த பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவிகளை அவர் செக்ஸ் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நரபலி சம்பவம் வெளியான பின்னர் இதுபோன்று வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் எர்ணாகுளம் மட்டுமின்றி கேரளா முழுவதும் இந்த காலகட்டத்தில் சுமார் 26 பெண்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவர்களில் யாராவது நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்காக கைதான 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர்.

இதில் அவர்களை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த 12 நாட்களிலும் போலீசார் முகமது ஷபி மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். அப்போது நரபலி சம்பவம் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!