பஸ் டிரைவர்கள் கொடுத்த லவ் டார்ச்சர் – இரு குழந்தைகளின் தாய் எடுத்த விபரீதமுடிவு!

குளச்சல் அருகே இரண்டு குழந்தைகளின் தாய் மினி பஸ் டிரைவர்கள் கொடுத்த லவ் டார்ச்சரால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரிடம் டிரைவர்கள் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த காரியவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சஜிலா சுங்கான்கடை பகுதியில் உள்ள முத்து நீரோ என்ற தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பணி முடிந்து இவர் வீட்டிற்கு வந்து நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் மினி பஸ் டிரைவர் துரோகம் செய்துவிட்டதாகவும், குழந்தைகள் குறித்து ஒழுக்கமாகவும் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் சஜிலாவின் தற்கொலைக்கு மினி பஸ் டிரைவர்கள் கொடுத்த லவ் டார்ச்சர்தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியும் போலீசார் அவர்களை கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது இந்த சம்பவத்திற்கு திருப்புமுனையாக, பணி முடிந்து வீடு திரும்பும் சகிலாவை மினிவஸ் டிரைவர் சிவில் மற்றும் அவரது நண்பர் இருவருமாக சேர்ந்து திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி விரட்டி தடுத்து நிறுத்தி அத்துமீறி லவ் டார்ச்சர் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே குளச்சல் போலீசார் மினிபஸ் டிரைவர் சிபின் மீது தற்கொலைக்கு தூண்டியது பெண்ணை பொது இடத்தில் மானபங்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

மேலும் மினிபஸ் டிரைவர் சிபின் உடன் கள்ள தொடர்பில் இருந்த இன்னொரு பெண் மூலம் தான் சஜிலாவின் மொபைல் எண் மினிபஸ் டிரைவர் சிபின் வாங்கி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!