சென்னை விமான நிலையத்தில் நடந்த பயங்கரம்… பயந்து அலறிய பயணிகள்…!


ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று ரன்வேயில் புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்த நிலையில், விமான டயர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால், விமான நிலைய வளாகம் பதற்றமாகியது.

தீ விபத்து எதுவும் ஏற்படும் முன்னரே, மீட்புக்குழுவினர் அங்கு பயணிகளை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, மாலை 6 மணி வரை ரன்வே மூடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!