பாசமாக மீன் குழம்பு வைத்து கொடுத்த பாட்டி… பேரன் செய்த கொடூரம்!

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், சமைத்த மீன் குழம்பு சோறு சாப்பிட்டு விட்டு, கடன் கேட்ட ஆத்திரத்தில், சுத்தியலால் அடித்து பாட்டியை கொன்ற பேரன் கைதானார்.

சென்னை, கொருக்குப்பேட்டை, கண்ணகி நகரை சேர்ந்தவர் விசாலாட்சி (70). இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகள் அமுதாவின் மகன் சதீஷ்(36).

இவர்கள், செங்குன்றத்தில் வசித்து வருகின்றனர். அமுதா அங்கு புதிதாக வீடு கட்டியுள்ளார். வீடு கட்ட தாய் விசாலாட்சி 2 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வீடு கட்டியதில், அமுதாவிற்கு கடன் பெருகி கடன் தந்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், அமுதா அந்த வீட்டை விற்று கடனை அடைந்துள்ளார்.

தாய் விசாலாட்சிக்கு அமுதா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்நிலையில், மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயை கேட்டு அமுதாவிற்கு, விசாலாட்சி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அமுதாவின் மகன் சதீஷ் பாட்டி வீட்டுக்கு வந்தார்.

பேரன் வந்த பாசத்தில், விசாலாட்சி, மீன் வாங்கி குழம்பு வைத்தார். மதியம், சதீஷ் மீன் குழம்பு சோறு சாப்பிட்டார். அப்போது, விசாலாட்சி, அமுதா வாங்கிய கடன் குறித்து பேசினார்.

அப்போது, அம்மாவை தப்பாக பேசாத, என சதீஷ் கூறினார். ஆனால், விசாலாட்சி வாங்கிய கடனில், ஒரு லட்சம் ஏமாற்றி விட்டார் என தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், விசாலாட்சியை பிளேடால் கிழித்து, பின், சுத்தியலால் அடித்துக்கொன்றார்.

பாட்டியை கொலை செய்துவிட்டதை குறித்து கொஞ்சம்கூட அச்சமில்லாமல் அங்குள்ள ஒரு அறைக்கு சென்று டிவி பார்த்துள்ளார். தகவல் கிடைத்து, ஆர்.கே நகர் போலீசார் விரைந்து வந்தனர்.

விசாலாட்சி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சதீஷை கைது செய்தனர். இந்த சம்பவம் கொருக்குப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!