2 மகள்களை ஏரியில் தள்ளி கொன்று விட்டு தந்தை விபரீதமுடிவு..!

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜ மகேந்திரவரம் அடுத்த ஈ.எல் புரத்தை சேர்ந்தவர் சத்தியேந்திர குமார் (வயது 40). இவரது மனைவி சுவாதி (35) .

இவர்களுக்கு 12 வயது மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். சத்தியேந்திர குமார் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் அக்கவுண்டாக வேலை செய்து வந்தார். சத்தியந்திரகுமாருக்கு நிறைய கடன் தொல்லை இருந்ததாகவும், இதனால் அவர் வாங்கும் சம்பளம் முழுவதும் வட்டிகட்டி வருவதால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுவாதி மட்டும் சென்று இருந்தார். சத்தியேந்திர குமார் தனது மகள்களுடன் வீட்டில் இருந்தார். நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை சுவாதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. தனது கணவரின் செல்போனை தொடர்பு கொண்டார்.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுவாதி இது குறித்து ராஜ மகேந்திரவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று முன் தினம் மாலை சத்தியேந்திர குமார் தனது மகள்களுடன் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அங்குள்ள ஏரிக்கரையின் மேல் சத்தியேந்திர குமார் மற்றும் ரிஷிதா, சித்விகா ஆகியோர் காலணிகள் இருந்தது. உடனே தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு ஏரியில் சோதனை செய்தபோது தந்தை மகள்கள் உடல்கள் பிணமாக மீட்கப்பட்டன. கடன் தொல்லையால் சத்தியேந்திர குமார் தற்கொலை செய்தாரா அல்லது வேறு யாராவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!