தீயாய் பரவும் போட்டோ… நிச்சயதார்த்த விழாவில் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா ஜோடி!

நடிகர் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஜோடியாக நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சர்ச்சைகளில் சிக்கியவர் கெளதம் கார்த்திக். இவர் தற்போது சிம்புவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார்.

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளன. ‘பத்து தல’ படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கெளதம். இதனை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார்.

இந்நிலையில் ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டி விட்டதை அடுத்து விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என்ற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஆனால் இது குறித்து விளக்கமளித்த மஞ்சிமா மோகன் ’இது முழுக்க முழுக்க வதந்தி. தன்னுடைய பெற்றோர் இந்த வதந்தியால் மிகவும் மனமுடைந்து உள்ளனர் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் ஜோடியாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கௌதம் கார்த்திக்கின் நெருங்கிய நண்பரான கோபி என்பவரின் நிச்சயதார்த்த விழாவில் தான் இருவரும் இணைந்து கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஒரு வேளை மஞ்சிமா வதந்தி சொன்ன விஷயம் உண்மையா இருக்குமோ என டவுட்டாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!