குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் முத்துக்குமார். இவர் சரியாக வேலைக்கு செல்லமால் மது அருந்தி விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்த நிலையில் நேற்று இரவும் வழக்கம் போல மது அருந்தி விட்டு தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த முத்துராஜ் தனது மகன் முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. நாலாட்டின்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்(53) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் , இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் முத்துக்குமார் (26). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்துள்ளார், மேலும் முத்துக்குமார் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை நேற்று இரவும் வழக்கம் போல மது அருந்தி விட்டு வந்த முத்துக்குமார், தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். மேலும் மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

முத்துராஜ் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு தந்தையை வெட்டி முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட முத்துராஜ் தன் மகனை கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த அரிவாளால் மகனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. கழுத்து பகுதியில் வெட்டுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர், கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீது கோவில்பட்டியில் உள்ள காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!