தகுதியான ‘பேச்சிலர்’ சிம்பு – நடிகை சித்தி இட்னானி அதிரடி!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து நேற்று வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம், “காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சித்தி இட்னானி, “அனைவருக்குமே தெரியும். தமிழகத்தின் தகுதியான ‘பேச்சிலர்’ சிம்புதான் என்று. எனவே காதல் ரோஜாக்களை அவரிடம்தான் கொடுப்பேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அவருக்கான ஜோடி விரைவில் வந்து அவருடன் இணைய இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!