இறந்த நடிகையின் சொகுசு கார்கள் மாயம்!

அரியானாவில் உள்ள சோனாலியின் பண்ணை வீட்டில் இருந்து அவரது விலை உயர்ந்த சொகுசு கார்கள், மரச்சாமான்கள் மாயமாகி உள்ளன.

அரியானாவை சேர்ந்த நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான சோனாலி போகத் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது மர்மமாக இறந்தார்.

அவரது சொத்துக்களை அபகரிக்க கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் சோனாலியின் உதவியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மரணம் அடைந்த சோனாலிக்கு ரூ.110 கோடி சொத்துக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ரூ.96 கோடி மதிப்பில் பண்ணை வீட்டுடன் கூடிய பல ஏக்கர் நிலமும், காந்த் நகரில் ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகள், கடைகள் மற்றும் ரூ.6 கோடி மதிப்பில் ரிசார்ட்டு போன்றவைகளும் அவரது பெயரில் உள்ளன.

இந்த நிலையில் அரியானாவில் உள்ள சோனாலியின் பண்ணை வீட்டில் இருந்து அவரது விலை உயர்ந்த சொகுசு கார்கள், மரச்சாமான்கள் மாயமாகி உள்ளன.

அந்த வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களும் திருடப்பட்டு உள்ளன. கண்காணிப்பு கேமராவையும் அகற்றி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!