நெஞ்சு மீது படுத்து தூங்கிய மகாலட்சுமி… போட்டோ வெளியிட்ட ரவீந்தர்!

காதல் மனைவியான மகாலட்சுமி தன் நெஞ்சு மீது படுத்து தூங்கியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ரவீந்தர் சந்திரசேகர்.


தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், டிவி நடிகையான மகாலட்சுமியும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அதில் இருந்து அவ்வப்போது தங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

திருமணம் நடந்த அன்று கணவனும், மனைவியும் மாறி மாறி சாப்பாடு ஊட்டிவிட்ட வீடியோவை மகாலட்சுமி இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார்.


அதே வீடியோவை ரவீந்தரும் வெளியிட்டார். மேலும் மகாலட்சுமி தன் நெஞ்சு மீது படுத்து தூங்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.


அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

இதெல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனாலும் எதற்கெடுத்தாலும் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவதா?. மகா ஏதோ பொம்மையை கட்டிப்பிடித்து தூங்குவது போன்று தூங்குகிறார்.

போதும் நிறுத்திக்கோங்க ரவீந்தர். கொஞ்சம் ஓவராகத் தான் போகிறீர்கள். வனிதா விஜயகுமாரை சொல்லிவிட்டு நீங்கள் அவரை விட ஓவராக நடந்து கொள்கிறீர்கள் என தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ ரவீந்தரை மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்.

ரவீந்தரிடம் இருக்கும் பணத்திற்காக தான் மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!