ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த பம்பா பாக்யா!

தனது ஆசை நிறைவேறாமலேயே மரணத்தை தழுவியுள்ளார் பாடகர் பம்பா பாக்யா.

பிரபல பாடகரான பம்பா பாக்யா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னை அண்ணாநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதயத்துடிப்பு மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்தது தெரியவந்தது.

திடீர் மரணம்

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பம்பா பாக்யா காலமானார். அவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகிலும் இசைத்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகர்கள்

ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான ராவணன் படத்தின் மூலம் தான் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார் பம்பா பாக்யா. தொடர்ந்து ஏஆர் ரஹ்மான் இசையில் அதிக பாடல்களை பாடியுள்ள பம்பா பாக்ய, முன்னணி நடிகர்களின் படங்களிலும் பல பாடல்களை பாடியுள்ளார்.

நிறைவேறாத ஆசை

ரஜினிகாந்தின் எந்திரன் 2.o, விஜய்யின் சர்க்கார், பிகில் ஆகிய படங்களிலும் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் பம்பா பாக்யா. நடிகர் அஜித்துக்கும் தனது குரலில் பாட வேண்டும் என ஆசைப்பட்டார் பம்பா பாக்யா. ஆனால் அவரது ஆசை நிறைவேறாமலேயே மரணத்தை தழுவியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!