‘மை புருஷா’ ஹனிமூனில் உருகும் விஜே மகாலக்ஷ்மி!

புதிதாய் திருமணம் முடித்துள்ள விஜே மகாலக்ஷ்மி தனது கணவர் ரவீந்தர் குறித்து பதிவிட்டுள்ளார்.

சன் மியூஸிக்கில் விஜேவாக கெரியரை தொடங்கியவர் விஜே மகாலக்ஷ்மி. பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அன்பே வா, மகராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் மகாலக்ஷ்மி.

திருமணம் விவாகரத்து

தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மகாலக்ஷ்மி. ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி. அனிலுக்கும் மகாலக்ஷ்மிக்கும் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றனர்.

நடிகருடன் காதல்

இதனை தொடர்ந்து, சீரியல் நடிகையான ஜெய்ஸ்ரீயின் கணவரும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிகருமான ஈஸ்வருடன் மகாலக்ஷ்மி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக ஜெய்ஸ்ரீ குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக தனது கணவர் ஈஸ்வர் மீதும் மகாலக்ஷ்மி மீதும் ஜெய்ஸ்ரீ போலீஸில் புகார் அளித்தார்.

தயாரிப்பாளருடன் திருமணம்

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்தார் மகாலக்ஷ்மி. திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர். திருமணமான தகவலை திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அறிவித்தனர்.

ஹனிமூன்

அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து மழை பொழிந்து வந்தனர். இந்நிலையில் மகாலக்ஷ்மியும் ரவீந்தரும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்துள்ள மகாலக்ஷ்மி கழுத்தில் மஞ்சள் கயிருடன் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

மை புருஷா

மேலும் அந்த போட்டோவுக்கு வாழ்க்கை அழகாக இருக்கிறது, அதை நீதான் செய்தாய் என் புருஷா என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மற்றொரு திருமண போட்டோவை ஷேர் செய்துள்ள மகாலக்ஷ்மி, நீ என் இதயத்தை திருடிவிட்டாய், அது உன்னிடமே இருக்க விட்டுவிடுகிறேன் குறிப்பிட்டுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!