மைத்திரியின் செயற்பாட்டை வன்மையாக கண்டித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…!


பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பணி இடைநிறுத்தும் செய்யும் உத்தரவை ரத்துச் செய்து, அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள உத்தரவிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு வெளிவிவகார அமைச்சு எடுத்த முடிவானது சரியானது.

பணி இடைநிறுத்தத்தின் பின்னரே விசாரணை இடம்பெற வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே சிறிலங்கா அதிபர் இவ்வாறு செயற்பட்டுள்ளார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். – Source : puthinappalakai.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!