வீட்டில் வரக்கூடிய பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கக் கூடிய தாந்திரீக பரிகாரம்!

வீட்டில் வரக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய பரிகாரங்கள் பலனும் கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, அதில் ஒரு கட்டி கற்பூரத்தை ஏற்றிக்கொள்ள வேண்டும். மெழுகு கற்பூரம் பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.

சூடம் என்று சொல்லப்படும் கற்பூரத்தை இந்த பரிகாரத்துக்கு பயன்படுத்துங்கள். ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றி அதில் இரண்டு கிராம்பு போட வேண்டும். அதிலிருந்து நமக்கு ஒரு வாசம் வெளியேறும். கற்பூரத்தோடு கிராம்பு சேர்ந்து எரியும்போது இந்த புகையை உங்கள் வீடு முழுவதும் காண்பிக்கலாம்.

உதாரணத்திற்கு கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இருக்கிறது என்றால் படுக்கை அறையில் இந்த கிராம்பு புகையை காண்பியுங்கள். வீட்டில் சொந்த பந்தங்களுக்கிடையே அதிக சண்டை சச்சரவு வருகிறது என்றால் வரவேற்பு அறையில் இந்த கிராம்பு புகையை காண்பியுங்கள்.

இது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற அறைகளிலும் இந்த சூடத்தை காண்பிக்கலாம். இந்தப் புகை உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அழித்து நல்லதை செய்யும். தேவையற்ற கண் திருஷ்டி இருந்தாலும் அதை பொசுக்கக் கூடிய தன்மை இந்த வாசத்திற்கு உண்டு. சுவாமி அறையில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் கற்பூர ஆரத்தியை சுவாமிக்கு காண்பிப்போம் அல்லவா. அப்படி கற்பூர ஆரத்தி காண்பிக்கும் போது அந்த கற்பூர தீபத்தில் கொஞ்சமாக வெல்லம் சேர்க்கலாம்.

அப்படி இல்லை என்றால் டைமன் கற்கண்டுகளை சேர்க்கலாம். எரிந்து கொண்டிருக்கும் அக்கினி பகவானை சாந்தியடைய செய்வதற்காக இந்த ஒரு பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்.

வீட்டில் தீயாய் இருக்கும் பிரச்சனைகள் சுமூகமாக ஒரு முடிவுக்கு வரும். அக்னி பகவானிடம் இனிப்பை பிரசாதமாக கொடுத்து, வீட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்களே நம்ப முடியாத அதிசயம் நிச்சயம் வீட்டில் நடக்கும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!