மைத்திரிக்கு எதிராக களம் இறங்கிய இராணுவம்! அதிர்ச்சியில் மக்கள்..!


கடந்த 28 வருட காலமாக ருத்தித்துறை பொன்னாலை பிரதான வீதி இராணுவத்த்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த வீதியை திறந்துவிடுமாறு பணித்தார்.

அதன் பிரகாரம் இவ்வீதி நேற்று காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டதோடு, மக்கள் மகிழ்ச்சியுடன் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவ்வாறு திறந்துவிடப்பட்ட பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியை, இராணுவம் மீண்டும் மூடியுள்ளது.

நேற்று காலை இவ்வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட நிலையில், இன்றைய தினம் அங்கு மக்களை இராணுவம் அனுமதிக்கவில்லையென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று காலை அங்கு சென்ற மக்களை இராணுவம் திருப்பியனுப்பியதோடு போக்குவரத்தை இடைநிறுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பொன்னாலையின் சில பகுதிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த வீதியை ராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், அருகிலுள்ள இடங்களுக்கும் பல கிலோமீற்றர் தூரம் கடந்து வேறு வழிகளில் செல்லும் துர்ப்பாக்கிய நிலையை இம்மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜனாதிபதி குறித்த வீதியை திறக்குமாறு பணித்திருந்தார்.

எனினும், திறந்த ஒரே நாளில் இவ்வீதியை இராணுவம் மூடியுள்ளமை வேதனையும் விசனமும் அடையச் செய்துள்ளதென குறிப்பிடும் மக்கள், ஜனாதிபதியின் செயற்பாடுகள் வெறும் கண்துடைப்புக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிடுகின்றனர்.

இதே வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை அவமதிக்கும் வகையில் இராணுவத்தின் இச் செயற்பாடு அமைந்துள்ளதாக கவலை வெளியிடும் மக்கள் இச் செயற்பாட்டால் கலக்கம் அடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.-Source: tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!