லக்கா மாட்டிக்கிச்சு பாடிய கானா பாடகரை சிறையில் அடைத்த போலீசார்..!

சென்னையில் ஓடும் ஆட்டோவில் பள்ளி மாணவியிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்ட கானா பாடகர் டோலக் ஜெகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு கடந்த 8 ஆம் தேதியன்று ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த ஆட்டோவில் ஏற்கனவே சவாரி செய்து வந்த இரண்டு வாலிபர்கள் மாணவியை உரசியபடி நெருங்கியுள்ளனர்.

இதனால், எரிச்சலான மாணவி தள்ளி வந்து அமர்ந்துள்ளார். ஆனாலும், அந்த வாலிபர்கள் மாணவியை விடமால் தொந்தரவு கொடுத்துள்ளனர். மாணவி அதை பொறுத்துக்கொண்டு அமைதியாக பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஆட்டோ புது வண்ணாரப்பேட்டை அருகே வந்தபோது ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் மாணவியின் மீது கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி எங்கே என்னை கடத்தி விடுவார்களோ என பயந்து அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து எகிறி வெளியே குதித்து விட்டார்.

இதனால், மாணவியின் மூக்கு, தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர் என்னவென்று சுதாரிப்பதற்குள் வாலிபர்கள் இருவரும் தப்பித்து ஓடிவிட்டனர். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கடத்த முயன்றது யார் என்று விசாரித்து வந்தனர். மேலும், சம்பாவிட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர்.


அதை வைத்து விசாரணை நடத்தியதில் பள்ளி மாணவியிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்டது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல கானா பாடகரான டோலக் ஜெகன் என்ற ஜெகதீஸ்வரன் என்றும் மற்றொருவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதாகியுள்ள டோலக் ஜெகன் இரங்கல் உள்ளிட்ட கானா கச்சேரிகளில் பாடி வருகிறார். இவர் வட சென்னையில் பிரபல பாடகரான கானோ வினோத்தின் நண்பரும் ஆவார். மேலும், டோலக் ஜெகன் ”வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” என்ற படத்தில் லக்கா மாட்டிக்கிச்சு என்ற பாடலையும் பாடியுள்ளார். தனியாக பல கானா பாடல்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!