3வது உலக போர் எப்போ நடக்கும்..? வைரலாகும் புது ஜோதிடரின் கணிப்பு!

உலகமெங்கிலும் மூன்றாம் உலகப்போரை பற்றிய விவாதங்கள் முன்னிலையில் உள்ள நேரத்தில் க்யூப சோதிடர் ஒருவர் மூன்றாம் உலகப்போர் எவ்வளவு நாட்கள் நடக்கும்? யார் அதை ஆரம்பிக்க போகிறார் என கணித்துக் கூறியுள்ளார். அதற்கான காரணங்கள் என்ன என்பது உட்பட கூறியுள்ள அவரின் கணிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மூன்றாம் உலகப் போரை ஆரம்பிக்க போகும் நாடு இதுதானா?
மூன்றாம் உலகப்போரை கணித்து கூறிய வைரல் பெண்!
உலகெங்கிலும் சோதிடம் என்ற பெயரில் எதிர்காலத்தை கணிக்க கூடிய பலர் உள்ளனர். இதற்காகவே தனியாக பட்டயப்படிப்பெல்லாம் உண்டு. பலர் முறையாக படித்து சோதிட சூத்திரங்களை தெரிந்துக் கொண்டு இதை செய்கின்றனர்.

சிலர் பாரம்பரிய முறைப்படி தங்கள் முன்னோர்கள் வழியில் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இயங்கிவரும் க்யூப நாட்டை சேர்ந்த மோனி விடன்ட்டே என்ற சோதிட நிபுணர் மூன்றாம் உலகப் போர் கண்டிப்பாக நடக்கும் என்றும் சீனாதான் அந்த போரை முன்னின்று நடத்தும் என்றும் கூறியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

பாபா வங்காவின் கணிப்பு…
இதற்கு முன் கூட பலரும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை கணித்து அது அப்படியே நடந்தும் இருக்கிறது. உதாரணமாக பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா என்ற பார்வை மாற்றுத்திறனாளி ஜோதிடர் தன்னுடைய சொந்த மரணம் உட்பட இந்திரா காந்தி மரணம், 9/11 தீவிரவாத தாக்குதல் என பலவற்றை கணித்து அது அப்படியே நடந்ததால் அவர் எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசி என உலகத்தாரால் பாராட்டப்பெற்றவர். இதே போல பலரும் உலகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை முன்னதாகவே கணித்து கூறி வைரலாகியுள்ளார்கள்.

புது ஜோதிடரின் கணிப்பு…
தற்போது அதே போல்தான் மோனி விடன்ட்டேவும் மூன்றாம் உலகப்போர் பற்றி கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மூன்றாம் உலகப்போர் 9 வருடங்களுக்கு நீடிக்கும் எனவும், அதற்கு முக்கிய காரணமாக சீனாதான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். பல ஆண்டுகளாகவே மூன்றாம் உலகப்போர் குறித்து பலரும் பேசி வருகிறார்கள். சமீப ஆண்டுகளாக இந்த வாதம் முண்ணனியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் – ரஷ்யா போரின் நீட்சி…
சமீப காலமாக நடந்து வரும் ரஷ்யா உக்ரைன் போரின் தொடர்ச்சியாக இது ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்னதான் அந்த போர் தற்போது சிறிய எல்லைக்குள் சுருங்கி விட்டாலும் ரஷ்ய அதிபர் புதின் இந்த சண்டைக்குள் மேலும் பல நாடுகளை கொண்டு வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அமெரிக்காவோடு நெருக்கமாக மற்றும் உலகத்தில் முண்ணனி நாடாக இருக்கும் தென்கொரியா ஜப்பான், வியட்னாம், வடகொரியாவையும் தன்னோடு இணைத்துக் கொள்ள நினைக்கிறது என அவர் கூறியுள்ளார்.

சர்வாதிகார சக்தி?!
மேலும் சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லாதிக்க சக்தியாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் சென்று உலகப் போரை தூண்டிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

“குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துக் கொண்டிருக்கின்றன. உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!