மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி செயலாளருக்கு காதலன் செய்த கொடூரம்!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி செயலாளரை காதலன் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் உள்பட 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவாகும்.

இதனிடையே, கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் கோதனல்லூர் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளராக செயல்பட்டு வருவபவர் சூர்ய பிரியா (வயது 24). இவர் சித்திலஞ்சேரி பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். சூர்யபிரியா சித்திலஞ்சேரிக்கு அருகே உள்ள கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சூர்யபிரியாவும் அதேபகுதியை சேர்ந்த சுஜீஸ் (வயது 27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சூர்ய பிரியா வீட்டிற்குள் இன்று காலை காதலன் சுஜீஸ் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு தனியாக இருந்த சூர்ய பிரியாவை சுஜீஸ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், சுஜீஸ் அருகே உள்ள போலீஸ் நிலையம் சென்று தான் சூர்ய பிரியாவை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சூர்யபிரியாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சூர்யபிரியா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சூர்யபிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் சுஜீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சூர்யபிரியாவை அவரது காதலன் சுஜீஸ் கழுத்தை நெரித்து கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிர்வான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் சூர்ய பிரியா வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!