உங்க குழந்தை சுகப்பிரசவமாக பிறக்க வேண்டுமா..? இதை தினமும் உட்கொண்டாலே போதுமாம்..!


கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஏற்படும் ஓர் உன்னதமான விடயம். வயிற்றில் வளரும் குழந்தையை இனிதே பெற்றெடுக்க ஒவ்வொரு தாயின் உடலும் தனது முழு பங்களிப்பை நல்கும். அதனால் அதற்கு சிறந்த ஊட்டச்சத்து உடலில் இருப்பது அவசியம்.

தாயின் உடலுக்குச் செல்லும் அனைத்து விதமான உணவுப் பொருட்களும், குழந்தையின் நலனில் ஆதிக்கம் செலுத்தும் என்பதால், முன்பெல்லாம் சிறந்த உணவு வகைகளை தெரிவு செய்து, தாய்மார்களுக்கு வழங்கினார்கள். அத்துடன் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சகல விதமான பிரச்சினைகளுக்கும் ஆயுர்வேத முறைகளால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகைகளை வழங்கினார்கள். அவ்வாறு வழங்கப்பட்டவைகளில் சீரகத் தண்ணீர் ஓர் சிறந்த மருந்தாக இனங்காணப்பட்டுள்ளது. கர்ப்ப காலம் முழுவதும் இந்த சீரகத் தண்ணீரை உட்கொள்வதால் என்ன நலன் கிட்டும் எனப் பார்ப்போம்.

இரத்த சோகைக்கு சிறந்த தீர்வு

கர்ப்ப காலத்தில் பெரும்பாலான தாய்மார்கள் இரும்புச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவதுண்டு. சீரகத் தண்ணீரில் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுவதால் இதனை கருவுற்ற தாய்மார்கள் தினமும் குடிப்பது சிறந்தது. அதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை குணமடையும்.


அமிலத்தன்மை குறைவடையும்
வயிறு மற்றும் குடல் வழியாக கருப்பை தள்ளி நிற்பதால் அதிகளவு வாயு வெளியேற்றம் மற்றும் வீக்கம் என்பன ஏற்படுகின்றன. சீரகத் தண்ணீரை தினமும் அருந்துவதால் அமிலத்தன்மை குறைவடைவதோடு உணவு ஜீரணிப்பதும் இலகுவாகின்றது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நிலையாக பேணப்படும்
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது பொதுவாக எல்லா தாய்மார்களும் எதிர்நோக்கும் பிரச்சினை தான். எனினும், சீரகத் தண்ணீரை அருந்துவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.

இரத்த அழுத்தம் சீராக்கப்படும்
கருவுற்ற தாய்மார்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் அது இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கக் கூடும். அது குழந்தையின் வளர்ச்சியை அதிகம் பாதிக்கும் என்பதால் அதற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சீரகத் தண்ணீரை அருந்துவதன் மூலம் இரத்த
அழுத்தத்தை சீராக்க முடியும்.

மலச்சிக்கலில் இருந்து விடுதலை
கருப்பை படிப்படியாக வளர்ந்து அது குடலின் மீது ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக இந்த மலச்சிக்கல் ஏற்படுகின்றது. அத்துடன் வீக்கம் மற்றும் அடி வயிற்றில் வலி என்பனவும் ஏற்படும். இவை அனைத்திலிருந்தும் விடுதலை அளிக்கும் சிறந்த மருந்தாக சீரகத் தண்ணீர் விளங்குகின்றது.


இந்த சீரகத் தண்ணீரை எவ்வாறு வீட்டில் தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
3 தேக்கரண்டி சீரக விதைகள
1 ½ லீட்டர் தண்ணீர்

தயாரிக்கும் முறை:
01. சீரகத் தண்ணீர் கலந்த விதைகளை 5 நிமிடங்கள் கொதிக்கவும்.
02. அந்த தண்ணீரை வடித்து அதனை ஆற விடவும்.
03. கொதித்தாறிய சீரகத் தண்ணீரை ஒரு போத்தலில் போட்டு அவ்வப்போது குடிக்கவும்.
04. இது போன்று தினமும் சீரகத் தண்ணீர் தயாரிப்பதை பழக்கமாக்கிக் கொள்வது சிறந்தது.

© tamilvoicenews.com | All Rights Reserved

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி