சினேகனுக்கு எதிராக கொந்தளித்த நடிகை ஜெயலட்சுமி.!

சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி பாடகர் சினேகன் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி சின்னத்திரை நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி பண மோசடி செய்வதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து ஜெயலட்சுமி தற்போது விளக்கமளித்துள்ளார்.

பாடலாசிரியர் சினேகன் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருவதாகவும், ஆனால் சமீப காலமாக இணைய தளத்தில் தனது பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் பரபரப்பு புகார் அளித்தார்.

இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் பணம் பெறுவதால் தன்னிடம் விசாரணை செய்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள முகவரியை இரண்டு முறை சட்டபூர்வமாக விளக்கம் கேட்டு கடிதம் எழுதியும், எந்தவித பதிலும் தரவில்லை. இதனால சென்னை காவல் ஆணையத்தில் எனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக சினேகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி, கவிஞர் சினேகனின் என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு 7 நாட்களுக்குள் ஆதாரத்தோடு விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் அப்படி தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சினேகன் கூறும் குற்றச்சாட்டை போல் அவர் தரப்பிலிருந்து எனக்கு எந்த விதமான தொலைபேசி அழைப்போ கடிதமோ வழக்கறிஞர் மூலமாக மனுவோ என எதுவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாடியை சேர்ந்த கீதா என்பவர் ஜெயலட்சுமி மீது கமிஷனர் அலுவலகத்தில் கந்துவட்டி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!