ஒரே நாளில் தான் வரைந்த ஓவியங்களை விற்று சம்பாதித்த பிரபல நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தன் ஓவியங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ததில் ஒரே நாளில் ரூ. 28 கோடி சம்பாதித்திருக்கிறார்.

நடிகர் ஜானி டெப் வரைந்த ஓவியங்கள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்ததில் அவருக்கு ரூ. 28 கோடி கிடைத்திருக்கிறது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் ஹாலிவுட் படம் புகழ் ஜானி டெப்புக்கும், அவரின் முன்னாள் மனைவியான நடிகை ஆம்பர் ஹெர்டுக்குமான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது.

ஆம்பர் ஹெர்ட் மீது ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. ஜானி டெப்புக்கு 10 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று ஆம்பருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பணம்

ஜானி டெப்புக்கு கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஆம்பர்.பணத்துக்காக அல்ல நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கத் தான் வழக்கு தொடர்ந்தேன் என்றார் ஜானி டெப். வழக்கில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

ஓவியங்கள்

தான் வரைந்த ஓவியங்கள் காசில் ஃபைன் ஆர்ட் மூலம் விற்பனைக்கு வருவதாக ஜானி டெப் அறிவித்தார். சுமார் 780 ஓவியங்கள் விற்பனைக்கு வந்தன. ஜானி டெப்பின் ஓவியங்கள் ரூ. 28 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஒரே நாளில் அவருக்கு ரூ. 28 கோடி கிடைத்திருக்கிறது. ஜானி டெப்பின் ஓவியங்கள் விற்றுத் தீர்ந்த விதம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

இணையதளம்

ஜானி டெப் வரைந்த ஓவியங்கள் விற்பனைக்கு வருவதை அறிந்து பலரும் அவற்றை வாங்க போட்டி போட்டிருக்கிறார்கள். இதனால் ஓவியங்களை விற்பனை செய்த இணையதளம் கிராஷ் ஆகிவிட்டது. வியாழக்கிழமை காலை விற்பனை துவங்கியிருக்கிறது. ஓவியங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக மாலையிலேயே அறிவித்துவிட்டனர். 780 ஓவியங்கள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. முன்னதாக ராக்கர் ஜெஃப் பெக்குடன் சேர்ந்து ஒரு இசை ஆல்பத்தை கடந்த மாதம் வெளியிட்டார் ஜானி டெப் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!