நடிகர் சத்யராஜுடன் குத்தாட்டம் போட்ட பேரறிவாளன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

பேரறிவாளனின் பெற்றோர்கள் குயில் தாசன், அற்புதம்மாள் இவர்களின் பிறந்தநாள் விழா ஜோலார்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் குயில் 80, அற்புதம் 75 என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர்கள் சத்யராஜ், தியாகு, அரசியல் தலைவர்கள் சீமான், தமிமுன் அன்சாரி, கொளத்தூர் மணி, எஸ். பி. உதயகுமார், சுப்புலட்சுமி ஜெகதீசன், இயக்குனர் மிஷ்கின், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உள்பட நடிகர்கள், இயக்குனர்கள் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் தலைமையில் இசை கச்சேரி நடைபெற்றது. இதில் பாடல் பாடிக்கொண்டு அற்புதம்மாளின் உருவத்தை ஓவியமாக வரைந்தார். பின்னர் ஓவியத்தை குயில் தாசன், அற்புதம்மாள், பேரறிவாளன் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது மேடையில் ஒரு பாடலுக்கு பேரறிவாளன் நடனம் ஆடினார். அவருடன் நடிகர் சத்யராஜும் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டார். அவர்களது நடனத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!