சிம்பு எனக்கு அண்ணன் மாதிரி…. நடிகை ஸ்ரீநிதி பகீர் தகவல்!

சிம்பு தன்னை காதலிப்பதாக கற்பனையில் இருந்ததாக சமீபத்திய பேட்டியில் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. விஜய் டிவியில் யாரடி நீ மோகினி சீரியலில் அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி. வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இவர் அண்மையில் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை எடுத்தார்.


இந்நிலையில் அண்மையில் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி அவர் வீட்டின் முன்பு ஸ்ரீநிதி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவரது அம்மா, ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் மன அழுத்தத்திற்காக சிகிச்சை எடுத்து வரும் ஸ்ரீநிதி தற்போது ஷகிலாவுக்கு அளித்த பேட்டியில், சிம்பு உன்னை காதலித்ததாக சொல்லிக் கொண்டிருந்தாய். இப்போதும் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறாயா.?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி, சிம்பு என்னை காதலிப்பதாக சொன்னது உண்மை தான். ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை. நான் அப்போது எமோஷனலாக இருந்தேன்.

அப்போது சிம்பு என்னை லவ் பண்ணியதாக நானாகவே நினைத்துக் கொண்டேன். கற்பனை பண்ணிக் கொண்டேன். அது என்னுடைய இமேஜினேஷன் தான். ஆனால் பிறகு யோசித்துப் பார்த்தேன். உண்மையிலேயே சிம்பு என்னை அப்படி லவ் பண்ணி இருந்தால், அவர் ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் எதையெதையோ பற்றி ட்விட்டரில் பேசுகிறார். என்னை பற்றி யோசிக்காமல் இருக்கிறார் என்று யோசித்தேன்.

தற்போது நான் அந்த கற்பனையில் இருந்து வெளியே வந்து விட்டேன். சிம்புவை நான் காதலிக்கவில்லை, சிம்புவும் என்னை காதலிக்கவில்லை. ஆனால் எனக்கு சிம்புவை பிடிக்கும்.” என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீநிதி. இதற்கு ஷகிலா, “குழந்தை தெளிவாக சொல்லி இருக்கிறாள். சிம்பு அவளுக்கு அண்ணன் போன்றவர். இனி யாரேனும் இதைப்பற்றி தவறாக பேசினால் அவ்வளவுதான்” என்று என்று ஸ்ரீநிதியின் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!