மல்டி கலர் பிகினியில் வெறித்தனமா போஸ் கொடுத்த மந்திரா பேடி!

பாலிவுட்டில் தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடங்கியவர் மந்திரா பேடி. இவர் இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற விளம்பப்பட நடிகையும் ஆவார். இவர் ஓராண்டுக்கு முன்பு தன்னுடைய கணவரை இழந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக தென்படாமல் இருந்தார்.

தன்னுடைய மிகச்சிறிய வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்துவிட்ட மந்திரா தூர்தர்ஷனில் வெளியாகி மிகப்பிரபலமடைந்த சாந்தி என்னும் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுக்க பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அப்போது அவருக்கு வயது வெறும் 20.

தமிழில் மன்மதன் படத்தில் ஒரு சீனில் சிம்புவுடன் நடித்திருப்பார். 1999 ஆம் ஆண்டு ராஜ் கவுசால் என்பவரை மணந்து கொண்டு மும்பையில் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு அவருடைய கணவர் இறந்து விட்டார்.

விளம்பரம், மாடலிங், திரைப்படம் என படு பிஸியான நடிகையாக இருந்த மந்திரா பேஷன் உலகில் எப்போது ஹைபர் ஆக்டிவ்வாக இருப்பார். எப்போதும் தன்னை கவர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் காட்டும் எல்லா வித ஆடைகளையும் தேர்வு செய்து அணிவார். பெரும்பாலும் அவருக்கு நீளமான முடி பிடிக்காது என்பதால் முடியை பாய் கட் செய்து கொள்வார்.

அப்படி ஒரு ஸ்டைலான, கவர்ச்சியான மந்திராவுக்கு 50 வயதைத் தொட்டு விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தன்னுடைய குழந்தைகளுடன் இத்தாலி சுற்றுப்பயணம் சென்றிருக்கும் மந்திரா திடீரென கடற்கரையில் ஒரு கலர்ஃபுல் மல்டி கலர் பிகினியில் போஸ் கொடுத்தபடி, ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு. ரசிகர்களை சூடுபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ப்ளூ கலர் டாமினன்ட் ஆக இருக்கும்படியும் மஞ்சள், பச்சை, சிவப்பு, பிங்க், பர்ப்பிள் என எல்லா கலரும் மிக்ஸ் செய்தபடி ஒரு பிகினி. கண்ணுக்கு ஸ்டைலாக ஒரு கூலர், கையில் ஜூஸ் என பழைய 20 வயதில் இருந்த மந்திரா போல கவர்ச்சிப் புயலாக வீசுகிறார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!