தேர்தலுக்காக வெள்ளியன்று பாடசாலைகளுக்கு விடுமுறை…!


சிறிலங்காவில் எதிர்வரும் 10ஆம் நாள், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், வரும் 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளதாலும், பெரும்பாலான பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாலுமே, வரும் வெள்ளிக்கிழமை பாடசாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 19 பாடசாலைகளும், இரண்டு கல்வியியல் கல்லூரிகளும் இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படும் என்றும் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான மத்திய நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளில் முன்னாயத்தப் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதால், 19 பாடசாலைகளும், 2 கல்வியியல் கல்லூரிகளும் இன்று தொடக்கம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்று மூடப்படும் பாடசாலைகளில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, திருகோணமலை விபுலானந்த வித்தியாலயம் ஆகியனவும் உள்ளடக்கியுள்ளன. – Source : puthinappalakai.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!