விரைவில் விவாகரத்து… அம்மாவுக்கு புற்று நோய் – காமெடி நடிகைக்கு வந்த சோகம்!

நகைச்சுவை நடிகை பிரியங்கா மறுபடியும் சினிமாவில் நடிக்க வந்துள்ளது குறித்து அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் நடிகைகள் என கோவை சரளா உள்ளிட்ட சிலரை மட்டுமே கூறுவார்கள். வெள்ளித்திரையில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்களை விரல் விட்டு எண்ணலாம். அந்த வகையில் வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் தான் பிரியங்கா.


திருமணத்திற்கு பின் சினிமாவை விலகி இருந்த பிரியங்கா தற்போது, சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை பயணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில், திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடமாக சினிமா தொடர்பே இல்லாமல் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். பார்ப்பவர்கள் எல்லாம் மறுபடி நடிங்க என்று கேட்டார்கள்.

பசங்களும் நான் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க வந்தேன். இந்த பத்து வருஷம் சினிமாவில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. இப்போதுதான் சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து இருக்கிறது வெகுவிரைவில் சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை இதனால் விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறேன். என் அம்மாவிற்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறேன் இதற்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகையாக இருந்து அனைவரையும் சிரிக்க வைத்த இவரின் சொந்த வாழ்க்கையின் வலிகளை கேட்டு ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

சினிமாவில் காமெடி நடிகராக இருந்தாலும் சின்னத்திரையில் பயங்கரமான வில்லியாக நடிக்க ஆரம்பித்துள்ளார் பிரியங்கா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தொடரில் படுமோசமான வில்லியாக மிரட்டி வருகிறார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!