மீனாவை நினைத்து கண்கலங்கிய பிரபல இயக்குநர்!

நடிகை மீனா தனது கணவரை இழந்துள்ள நிலையில் அவர் குறித்து பேசி கண்கலங்கியுள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

பிரபல நடிகையான மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான மொழிகளில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, வெங்கடேஷ், என நான்கு மொழிகளிலும் உச்ச நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பெரும் அதிர்ச்சி

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வித்யாசாகரின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்

இந்நிலையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மீனா குறித்து உருக்கமாக பேசி கலங்கியுள்ளார். வித்யாசாகர் இறப்பு அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ள கேஎஸ் ரவிக்குமார், ஷூட்டிங்கில் அழும் காட்சியைக்கூட சிரித்துக் கொண்டே கேட்கும் மீனா தற்போது அழுவதை பார்க்க கஷ்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பேத்தியை நினைத்து

மேலும் மீனாவின் தாய் அவரது பேத்தியை நினைத்து அழுவதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்று கூறிய கே எஸ் ரவிக்குமார், மரணம் வரும் போகும்தான், ஆனால் அகால மரணத்தை தாங்க முடியவில்லை என்றார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகை மீனா ரஜினிகாந்துக்கு ஜோடியாக முத்து படத்தில் நடித்தார். அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!