நான் பெரிய உத்தமி எல்லாம் கிடையாது – ‘விக்ரம்’ பட நடிகை பகீர்!

கமலின் ‘விக்ரம்’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த மாயா கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.


மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்தப்படத்தை இயக்கியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிருந்தது. அதே போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளது ‘விக்ரம்’ படம்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘விக்ரம்’ படம். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியுடன் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பரபரப்பான திரைக்கதை அமைப்பினாலும், ஆக்ஷன் காட்சிகளினாலும் அனைத்து தரப்பு ரசிக்ரகளையும் கவர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும்வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது ‘விக்ரம்’. இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல். மேலும் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்தார் கமல். மேலும் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார்.

‘விக்ரம்’ படத்தில் ஒரே காட்சியில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆகியுள்ளவர் மாயா கிருஷணன். இந்தப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்த இவர், கமலிடம் ஆசிர்வாதம் வாங்கிய காட்சி அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது. ‘விக்ரம்’ படம் வெளியானதில் இருந்து தனியார் யூடிப் சேனல்களுக்கு இவர் அளிக்கும் பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அண்மையில் மாயா அளித்த பேட்டி ஒன்றில், என்னுடைய சுபாவமே எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்வதுதான். மேலும், நான் ஒன்றும் மிகப்பெரிய உத்தமி எல்லாம் கிடையாது. ‘விக்ரம்’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஷுட்டிங் ஸ்பாட்டில் எனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறார்களோ அதற்கு உண்மையாக இருந்து நடித்துக் கொடுத்தேன் என கூறியுள்ளார். மாயாவின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!