தான் மரணமடைந்துவிட்டதாக பொய்யான தகவல் பரவியதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளார் விஷால் பட நடிகை.
பிரபல மலையாள நடிகை குலப்புள்ளி லீலா நாச்சியார். மேடை நாடகக் கலைஞரான இவர் சினிமாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் முத்து படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து மாஸ்டர், அரண்மனை 3, அண்ணாத்த, கொம்பு வச்ச சிங்கமடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஷாலின் மருது படத்தில் அவருக்கு பாட்டியாக பட்டையை கிளப்பியிருப்பார் குலப்புள்ளி லீலா.
இந்நிலையில் லீலா திடீரென மரணமடைந்துவிட்டதாக யூட்யூப் சேனல் ஒன்று தவறாக செய்தி வெளியிட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் லீலாவுக்கு இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதேபோல் லீலாவின் உறவினர்களும் நண்பர்களும் போனில் தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தன்னை பற்றி பரவிய வதந்தி குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நடிகை குலப்புள்ளி லீலா.
அதாவது, லைக்ஸை பெறுவதற்காகவும், அதிகமாக ஷேர் செய்யப்பட வேண்டு, நிறைய பேர் தங்களின் யூட்யூப் சேனலை பார்க்க வேண்டும் என இப்படி பொய்யான செய்திகளை போடுகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு காசு கிடைக்கிறது. உயிரோடு இருக்கும் ஒருவர் இறந்துவிட்டதாக கூறிதான் சம்பாதிக்க வேண்டுமா என கேட்டு விளாசியுள்ளார் குலப்புள்ளி லீலா.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!