பிரபல நடிகைக்கு குடை பிடித்த நாயகன்…. பவுன்சராகவும் மாறினார்!

நடிகை சாய் பல்லவி விரத பர்வம் தெலுங்கு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் . அவரை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள். ஐதராபாத் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாய் பல்லவிக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள்.

அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். மேடைகளில் சாய் பல்லவி வந்தாலே அவரின் பெயரை தான் கோஷமிடுவார்கள்.

ரசிகர்களின் கரகோஷம் அடங்கும் வரை எந்த பிரபலமும் பேச முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சாய் பல்லவி விரத பர்வம் தெலுங்கு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் . அவரை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள்.

மேலும் சாய் பல்லவியுடன் சேர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் அவர் அருகில் வந்துவிடுகிறார்கள். அப்படி ரசிகர்கள் வந்தபோது சாய் பல்லவியை அவர்களிடம் இருந்து பத்திரமாக காப்பாற்றினார் ராணா.

படத்தின் ஹீரோவான ராணா, விளம்பர நிகழ்ச்சிகளில் தன் ஹீரோயினுக்கு பவுன்சராக மாறியது தான் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது. மேலும் ஆந்திராவில் விளம்பர நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்களை சாய் பல்லவியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!