ஒரு வேளை தான் சாப்பாடு… சோப்பு விற்கிறேன் – பிரபல நடிகையின் பரிதாப நிலை!

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் தற்போது சோப்புகள் விற்று வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி. இவருடன் நடிக்காத உச்ச நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரனும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


90களில் சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா, அதன்பின்னர் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால் துணை நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். உள்ளே வெளியே, ஹவுஸ்ஃபுல், ஆறு, ஜனா, வேல், குமரன் சன் ஆப் மகாலட்சுமி என பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்து போகவே ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஐஸ்வர்யா. இந்நிலையில் தற்போது யூடிப் சேனல் ஒன்றுக்கு இவர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன், மோசமான நிலையில் இருக்கிறேன், இந்த நிலை மாற வேண்டுமென்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லை எனக்கு பொருளாதாரமும் இல்லை, அதனால் ஜாலியாக சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன்.

இப்போது கூட கடன் இல்லை, வேறு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் வேலை இல்லை, நான் இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை, நான் பெருமைப்படுகிறேன். எந்த வேலை இருந்தாலும் சொல்லுங்கள் நான் நிச்சயம் செய்து விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக செல்வேன்.

இதில் என்ன தவறு இருக்கிறது, நான் ஆடம்பரமான ஆள் இல்லை, பட்டுப்புடவை கட்டுவதில்லை, யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன், ஆனால் இப்போது பொருளாதாரத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் எனக்கு ஒரு மெகா சீரியல் வேண்டும், நான் பிழைத்தது சீரியலை வைத்துத் தான் சினிமாவால் இல்லை. எனக்கு சினிமா சோறு போடவில்லை, டிவி தான் சோறு போட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!