உங்கள் கணவரை எப்படிக் கொல்வது..? எழுத்தாளருக்கு ஆயுள் தண்டனை!

உங்கள் கணவரை எப்படிக் கொல்வது..? புத்தகம் எழுதிய பிரபலமான பெண் எழுத்தாளருக்கு கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

“கணவரை கொலை செய்வது எப்படி?” என்ற கட்டுரையின் மூலம் பிரபலமான அமெரிக்க பெண் எழுத்தாளர் நான்சி கிராம்ப்டன் புரோபி 71 வயதான கிராம்ப்டனுக்கு தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்சியின் சஸ்பென்ஸ் படைப்புகளில் “தி ராங் ஹஸ்பண்ட்” மற்றும் “தி ராங் லவ்வர்” போன்ற நாவல்களும் அடங்கும். பல குறு நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவரும், சமையல் கலை நிபுனருமான டானியல் கிரெய்க், கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் சமையல் வகுப்புகள் நடத்தி வந்த நிறுவனத்தில் கிரெய்க் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும், இரண்டேகால் கோடி ரூபாய் வீடும் நான்சி வசம் சென்றது. கொலை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது நான்சி அங்கு இருந்துள்ளது தெரியவந்தது. இன்சூரன்ஸ் பணத்திற்காக அவர் கணவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!