காதல் கணவருடன் கேரளா சென்ற நயன்தாரா…. எல்லாம் அதற்காகத்தான்!

நடிகை நயன்தாரா தனது கணவருடன் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளார்.

7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பிரபலங்கள் பங்கேற்பு

இவர்களது திருமணத்தில் ஷாருக்கான் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி என பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றனர். திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த உடை மற்றும் அணிகலன்கள் பலரது கவனத்தையும் பெற்றது. அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்பட்டது.

திருப்பதி பயணம்

திருமணம் முடித்த மறுநாளே விக்கியும் நயனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். திருப்பதி கோவிலில் தடைசெய்யப்பட்டட பகுதியில் விக்கியும் நயனும் காலணி அணிந்திருந்ததாக சர்ச்சையில் சிக்கினர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு இருவரும் அறிக்கை வெளியிட்டனர்.

செய்தியாளர் சந்திப்பு

அதனை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விருந்து கொடுத்தனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நேற்று கேரளா சென்றுள்ளனர். கொச்சின் விமான நிலையத்தில் அவர்கள் இறங்கிய போட்டோக்கள் வெளியானது.

கேரளா பயணம்

இதில் நயன்தாரா ஆரஞ்ச் மற்றும் பீச் நிற குர்தா அணிந்திருந்தார். விக்னேஷ் சிவன் பிளாக் அன்ட் பிளாக்கில் இருந்தார். கொச்சின் விமான நிலையத்தில் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சொந்த ஊரான திருவல்லாவுக்கு புதுமண தம்பதியினர் புறப்பட்டு சென்றனர்.

விருந்து நிகழ்ச்சிகள்

நயன்தாராவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்த ஆசிர்வாதம் வாங்குவதற்காகவும் மேலும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் இருவரும் கேரளா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நயன்தாரா கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!