கல்லூரி மாணவியை கல்லால் அடித்து வாலிபர் செய்த வெறிச்செயல்..!

சேலம் அருகே காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவியை தலையில் கல்லால் அடித்து கொடூர கொலை செய்த சம்பவம் குறித்து 4 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும் நந்தினி, ரோஜா என்கிற இரண்டு மகள்களும் விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் முருகேசன் கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள சின்னசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார். முருகேசனின் இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி,ஏ, தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரையின் வீட்டிற்கு சென்றபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்துள்ளார். அப்போது மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

அடிக்கடி மாணவியின் ஊருக்கு சென்ற சாமிதுரை பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் போது மாணவியை காதலிக்க வலியுறுத்தி கட்டாய படுத்தியுள்ளதோடு திருமணம் செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் மாணவியின் உறவினர்களுக்கு தெரியவந்ததால் ஊரின் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜா வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு தோட்டத்திற்கு சென்று வீட்டின் பின்புற பகுதியில் பதுங்கி இருந்துள்ளான்.

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ரோஜாவை தன்னை காதலித்து திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் எனக்கூறியதாகவும் இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சாமிதுரை மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ரோஜா மீது ஊற்றியுள்ளார்.

பின்னர் ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்து கொண்டு கல்லை தூக்கி தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதை தடுக்க முயன்ற குடும்பத்தைரையும் கீழே தள்ளி விட்டு கொடுரமாக தாக்கியுள்ளார். உடனே ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு ரோஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் டிஎஸ்பி, ராமச்சந்திரன் நேரில் விசாரனை மேற்கொண்டு வருகின்றார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!