பிளாட் பாரத்தில் பெற்ற பிள்ளையை கட்டிவைத்து சென்ற தாய்!

புதுவை மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இரும்பு தடுப்பில் கயிற்றால் கட்டிப்போடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 3 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆண் குழந்தை உட்கார்ந்து கொண்டிருந்தது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் பிளாட்பாரத்தில் வசித்து வருவதும், அவர் தனது குழந்தையை கட்டிப்போட்டு வெளியே சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தையை கயிற்றில் கட்டுப்போட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!