முதல் மனைவிக்கு முத்தம் கொடுத்த இராணுவ வீரர்… 2வது மனைவி விபரீதமுடிவு!

ஜோலார்பேட்டை அருகே, ராணுவ வீரர் அவரது இரண்டாவது மனைவி முன்பு முதல் மனைவிக்கு முத்தம் கொடுத்ததால், இரண்டாவது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.


திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியை சேர்ந்தவர் பிரபாகரன், 28. ஜம்முவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். மனைவி, பூர்ணிமா, 25. விடுமுறைக்கு ஊருக்கு வந்த போது அதே பகுதியை சேர்ந்த சரிகா, 18, என்ற சிறுமியை காதலித்தார்.

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2019 ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.


சரிகாவில் தந்தை பழனி ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சிறுமியை திருமணம் செய்து கொண்டதற்காக பிரபாகரனை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். சரிகா அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


ஜாமினில் வெளியே வந்த பிரபாகரன், இரண்டாவது மனைவியை மிரட்டி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது தான், ஏற்கனவே பிரபாகரனுக்கு திருமணமாகியது சரிகாவுக்கு தெரியவந்தது. இதனால் தாய் வீட்டிற்கு சரிகா வந்து விட்டார்.இந்நிலையில், கடந்த மாதம் 29 ம் தேதி பிரபாகரனுக்கு பிறந்த நாள். அவரது முதல் மனைவி பூர்ணிமாவை அழைத்துக் கொண்டு இரண்டாவது மனைவி சரிகாவின் வீட்டுக்கு வந்தார்.

அவர்களை வீட்டில் சேர்க்கவில்லை. இதனால் வீட்டின் முன்பு பிரபாகரன் கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடி, சரிகா முன்பு முதல் மனைவி பூர்ணிமாவுக்கு முத்தம் கொடுத்து செல்பி எடுத்துக் கொண்டார்.இதனால் விரக்தியடைந்த சரிதா இரவு வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு சரிகா எழுதி வைத்த 12 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். சரிகாவின் தந்தை பழனி கொடுத்த புகார்படி ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!