கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி அதிர்ச்சி முடிவு..!

மரக்காணம் அருகே கள்ளக்காதலி வீட்டில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற நாராயணன் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு விஜி தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு கடைக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிச்சென்றுள்ளார்.

ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை பற்றிய விவரம் தெரியவில்லை.

தூக்கில் தொங்கினார் இந்தநிலையில் நேற்று காலை மரக்காணம் அருகே செட்டிக்குப்பத்தில் ஒரு பெண்ணின் வீட்டில் விஜி பிணமாக கிடப்பதாக தகவல் அறிந்து அவரது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது விஜி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் விஜிக்கும், செட்டிக்குப்பத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற இடத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த விஜி, அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையில் விஜி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் மரக்காணம் போலீசில் புகார் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!