இளம் பாடகருக்கு நேர்ந்த கொடூரம் – பிரபலங்கள் அதிர்ச்சி!

பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாடகர் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சித்து மூஸ் வாலா(28). பாடகரான அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மான்சா பகுதியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த விஜய் சிங்க்லா சித்துவை 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கொலை

சித்து உள்ளிட்ட424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை பஞ்சாப் மாநில அரசு நிறுத்தியது. அரசின் பாதுகாப்பு நிறுத்தப்பட்ட மறுநாளே சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

கார்

மான்சா மாவட்டத்தில் இருக்கும் ஜவஹர் கே கிராமத்தில் காரில் சென்று கொண்டிருந்தார் சித்து. அப்பொழுது தான் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவருடன் காரில் இரண்டு பேர் இருந்தார்கள். சித்துவின் காரை பின்தொடர்ந்து வந்த இரண்டு வாகனங்களில் இருந்தவர்கள் தான் இந்த வெறிச் செயலை செய்ததாக போலீஸ் உயர் அதிகாரி விரேஷ் குமார் பாவ்ரா தெரிவித்துள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!