இதனால தான் சித்ரா மாதிரி வளர முடியல… பிரபல நடிகை தடாலடி!

தனக்கு குறுக்கு வழி தெரியாததால்தான் தன்னால் வளர முடியவில்லை என பிரபல நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொகுப்பாளினியாகவும் விஜேவாகவும் வலம் வந்தவர் நடிகை விஜே சித்ரா. பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றிய விஜே சித்ரா, பல சீரில்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பெரும் பிரபலமனார்.

சித்ரா மரணம்

மேலும் கால்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார் விஜே சித்ரா. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகும் முன்பே சித்ராவின் வாழ்க்கை முடிநதுவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தனது கணவர் ஹேமந்துடன் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

சித்ரா தற்கொலை

அப்போது சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சித்ரா மரணத்திற்கு ஹேமந்துதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார் ஹேமந்த். இந்நிலையில் சித்ரா குறித்து பல்வேறு தகவல்களை கூறி வரும் நடிகை ரேகா நாயர், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

குறுக்கு வழி தெரியாது

அதில் சித்ராவும் தானும் ஒன்றாகதான் மீடியாவுக்குள் வந்தோம் என்று கூறியுள்ள ரேகா நாயர், தனக்கு குறுக்கு வழி தெரியாததால் தான் இந்த அளவுக்கு வளரவில்லை என கூறியுள்ளார். மேலும் தான் ஒரு ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு என்றும் வழ வழ கொழ கொழ பேச்செல்லாம் தனக்கு பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.

சித்ராவின் வளர்ச்சி

சித்ரா இவ்வளவு சீக்கிரம் வளர்ந்ததற்கு காரணம், அவர் எல்லோரிடமும் பழகியதுதான் என்றும் கூறியுள்ளார். சித்ராவுக்கு தான் நிறைய அட்வைஸ் செய்திருப்பதாகவும் இதுபோன்ற ஆட்களோடு பழக்கம் வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தனது அறிவுரைகளை கேட்டிருந்தால் சித்ராவுக்கு இதுபோன்ற நிலைமை வந்திருக்காது என்றும் கூறியுள்ளார் ரேகா நாயர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!