தூக்குப்போட்டு பெண் சாவு… தப்பியோடிய கணவன் – குடும்பத்தினர்!

நஞ்சன்கூடு அருகே குடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். கொலை என போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

குடும்பத்தகராறு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா இம்மாவு கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பேபி (வயது 29) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேபி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே பேபியின் கணவர் உமேஷ், அவரது பெற்றோர் குண்டப்பா-ஜெயலட்சுமி ஆகிய தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.

இதுபற்றி அக்கம்பக்கத்தினர் நஞ்சன்கூடு புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பேபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசில் பெற்றோர் புகார்

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் ஒன்று அளித்தனர். அதில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் குடும்பத்தராறில் மகள் பேபியை அடித்து கொன்று தற்கொலை செய்து கொண்டதுபோல் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுகின்றனர்.

எனவே, அவர்கள் 3 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து நஞ்சன்கூடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!