மகனுக்கு விஷம் கொடுத்து தாய் விபரீதமுடிவு!

சென்னை அம்பத்தூர் அருகே மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அம்பத்தூர் பள்ளி சாலையில் வசித்து வந்தவர் லதா (வயது 38). இவரது கணவர் பரத்வாஜ். இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. இருவரும் கடந்த 4 வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். லதா தனது ஒரே மகன் தவஜ் (14) என்பவருடன் வசித்து வந்தார். தவஜ் அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை லேசாக மயங்கிய நிலையில் இருந்த தவஜ் எதிரே வசிக்கும் நவநீதம் என்பவரை அழைத்து உள்ளார். கதவை திறந்து உள்ளே வந்த நவநீதம், லதா இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மயங்கிய நிலையில் இருந்த தவஜை உறவினர்கள் உதவியுடன் மீட்டு அம்பத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் பொருளாதார வசதி இன்றி இருந்து வந்த லதா தற்கொலை முடிவெடுத்து தனது மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் குடித்தது தெரியவந்தது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!