மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனாரால் பரபரப்பு!

சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மற்றொரு மருமகள் துப்பாக்கி குண்டு காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர் காஷிநாத் பாண்டுரங் பாட்டீல் (76). இவருக்கு அவரது 42 வயது மருமகள் நேற்று காலை தேநீர் வழங்கியதாக தெரிகிறது. அப்போது, அதனுடன் காலை உணவும் வழங்காததால் காஷிநாத் ஆத்திரமடைந்துள்ளார். இதில் காஷிநாத்துக்கும் அவரது மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, கோபத்தில் காஷிநாத் தனது துப்பாக்கியை எடுத்து மருமகளை நோக்கி சுட்டுள்ளார். இதில், மருமகளின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மற்றொரு மருமகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பு, காஷிநாத் மீது போலீசில் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காஷிநாத்திடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு வேறேதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar & oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!