மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன்- கைதான கோழிக்கறி கடைக்காரர் பகீர்!

சேலம் அருகே செல்போனில் பேசிய மனைவியை சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்து உள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி சசிகலா(வயது 37). இவர் கடந்த 13-ம் தேதி குடும்ப தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து மனைவி சசிகலாவின் உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய கணவன் ஜெயக்குமார் மற்றும் உறவினர்கள் முடிவு செய்து உள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கணவன் ஜெயக்குமாரிடம் போலீசார நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

விநாயகபுரத்தை சேர்ந்த சசிகலா என்பவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மனைவி சசிகலா வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கணவர் ஜெயக்குமார் ஒரு பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்.

அப்போது மனைவி சசிகலா செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஜெயக்குமார் கண்டித்து உள்ளார். இதை மனைவி சசிகலா கேட்காத காரணத்தால் கடந்த13-ம் தேதி மீண்டும் கணவர் ஜெயக்குமார் கண்டித்து உள்ளார்.

அப்போது கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில ஆத்திரம் அடைந்த கணவன் ஜெயக்குமார் கயிற்றால் மனைவி சசிகலா கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளார். பின்னர் தனது பெரியப்பா செல்வராஜின் உதவியுடன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று ஜெயக்குமார் நாடகம் நடத்தி உள்ளார்.

இதனை அடுத்து மனைவி சசிகலாவின் உடலை போலீசாருக்கு தெரியால் அடக்கம் செய்ய கணவர் ஜெயக்குமா முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!